வெள்ளக்கோவிலில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ தினமான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கோயில்களில் உள்ள நந்தி எம்பெருமானுக்கு புதிய பட்டாடை உடுத்தி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளக்கோவில், மயில்ரங்கம், கண்ணபுரம், லக்கமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.