சிவன்மலை, ஆலாம்படி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த, மின் பாதையில் நடைபெற உள்ள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10:30 மணிமுதல் மாலை 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் மருதாசலம் தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகம் தடைபடும் இடங்கள்: சிவன்மலை, அரசம்பாளையம், படியூர், சாவடிப்பாளையம், தம்மரெட்டிபாளையம், நல்லிபாளையம், கீரனூர், காரக்காட்டுபுதூர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சேர்வழி.