இளைஞர் சடலம் மீட்பு

திருப்பூர் கொங்கு பிரதான சாலை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் காவல் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.


திருப்பூர் கொங்கு பிரதான சாலை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் காவல் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.
திருப்பூர் கொங்கு பிரதான சாலை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடப்பதை அவ்வழியே சனிக்கிழமை அதிகாலை சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதன்படி அங்கு வந்த காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இறப்புக்கான காரணம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com