கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசி அருகே உள்ள கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.


அவிநாசி அருகே உள்ள கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு  சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி சுவாமி திருவீதி உலா நடைபெற்று, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, 17ஆம் தேதி பூதவாகன காட்சி, 18ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல், 19ஆம் தேதி புஷ்ப விமானம், மலர்ப் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் 
அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், 11 மணிக்கு யானை வாகனக் காட்சி ஆகியன நடைபெறுகின்றன. 20ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல், தேரோட்டம் நடைபெறுகிறது.
 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம், 22ஆம் தேதி மீண்டும் தேரோட்டம் நிலை வந்து சேருதல் ஆகியவை நடைபெறவுள்ளன. 23ஆம் தேதி தெப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி ஆகியவை நடைபெறுகின்றன. 24ஆம் தேதி அம்மன் தரிசனம், மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது. 27ஆம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com