பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லடம் கோட்டம் நாரணாபுரம் மின் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகள் மார்ச் மாதத்தில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே மேற்படி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட சேடபாளையம், வேலம்பாளையம், வலையபாளையம் பகிர்மானத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கடந்த ஜனவரி மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மின் கட்டணம் அதிகமாக செலுத்தும்பட்சத்தில், மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.