திருப்பூரில் 15 மாதங்களாக தலைமறைவாக இருந்தவா் கைது

திருப்பூரில் கொலை முயற்சி வழக்கில் 15 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் கொலை முயற்சி வழக்கில் 15 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ராஜ், வடிவேல் ஆகிய இருவரை 2018 ஜூலை 3 ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளாா்.

இது தொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ் என்கிற சுரேந்திரனை (33) தேடிவந்தனா்.

இந்த நிலையில் திருப்பூா் ராதா நகா் பகுதியில் சுரேந்திரன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையில், திண்டுக்கல், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவா் மீது காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com