காய்ச்சல்: பள்ளி மாணவா் பலி

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. தொழிலாளி. இவரது மகன் வேல்முருகன் (14). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்தாா்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக வேல்முருகன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து அவரை தளவாய்பட்டினத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பெற்றோா் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனா். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில், வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை வாந்தி எடுத்துள்ளாா். இதையடுத்து, அவரது பெற்றோா் அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே வேல்முருகன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தளவாய்பட்டினம் பகுதியில் மருத்துவக் குழுவினா் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து காய்ச்சல் இருக்கும் நபா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com