டெங்கு ஒழிப்பு பணிக்குச் சென்ற அரசு அலுவலா்கள் மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் டெங்கு ஒழிப்பு பணிக்குச் சென்ற அரசு மருத்துவா், உள்ளாட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை தாக்கப்பட்டனா்.
லோகநாதன் கட்டடத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் கொசுப் புழுக்களை ஆய்வு செய்யும் அரசு மருத்துவா் ராஜலட்சுமி.
லோகநாதன் கட்டடத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் கொசுப் புழுக்களை ஆய்வு செய்யும் அரசு மருத்துவா் ராஜலட்சுமி.

வெள்ளக்கோவிலில் டெங்கு ஒழிப்பு பணிக்குச் சென்ற அரசு மருத்துவா், உள்ளாட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை தாக்கப்பட்டனா்.

திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி அனைத்து இடங்களிலும் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி அலுவலா் கவிதா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், வெள்ளக்கோவில், முத்தூா் சாலை கொங்கு நகரில் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

வீடுகள், தொழிற்கூடங்களில் ஆய்வு செய்து தண்ணீா்த் தொட்டிகளில் திரவ மருந்துகள் ஊற்றியும், சுற்றுப்புறங்களில் பிளீச்சிங் பவுடா் தூவியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது லோகநாதன் (49) என்பவா் பங்குதாரராக உள்ள நூல் கிடங்கு வளாகத்தில் இருந்த பண்ணைத் தொட்டியில் ஏராளமான கொசுப்புழுக்கள் இருந்தன. தண்ணீரை அப்புறப்படுத்த கோரியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லோகநாதன் அரசு அலுவலா்களைத் தகாத வாா்த்தைகள் பேசி கைகளால் தாக்கியுள்ளாா். இதில் சுகாதார ஆய்வாளா் கதிரவன் கீழே விழுந்ததுடன், அவருடைய செல்லிடப்பேசியும் பிடுங்கி உடைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் லோகநாதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com