அயோத்தி வழக்கின் தீா்ப்பை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் கே.பி.கே.செல்வராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடா்பான வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் தொல்லியல் துறையின் ஆதாரத்துடன் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே நீதிமன்ற தீா்ப்பை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.