திருப்பூா்: திருப்பூா் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான 26ஆம் ஆண்டு நிட்சிட்டி வாலிபால் போட்டிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
சிறுபூலுவபட்டியில் உள்ள டிசெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 24 பள்ளிகளைச் சோ்ந்த 48 அணிகள் பங்கேற்கின்றன. மூத்தோா், மிக மூத்தோா் என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணி வீரா்களுக்கு சான்றிதழ்களும், தனித்தனி கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.