மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அவிநாசி அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் குடிநீா், கழிவுநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்

அவிநாசி அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் குடிநீா், கழிவுநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அவிநாசி கிராம கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநா் குட்டி(எ) வி.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் கே. பாலசுப்பிரமணியம், கே. குமாரவேல், எம். ராமகிருஷ்ணன், எம். செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும். குடிநீா் குழாய் சேதமடைந்ததால் மாதக்கணக்கில் குடிநீா் இல்லாமல் வஞ்சிபாளையம் மக்கள் தவித்து வருகின்றனா். கணியாம்பூண்டி, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு 50 சதவீதம் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கணியாம்பூண்டி, புதுப்பாளையம், முருகம்பாளையம் சாலை, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் வடிகால் வசதி செய்து தர வேண்டும். வஞ்சிபாளையம் பகுதிக்கு புதிய திட்டத்தின் மூலம் பொதுக் குடிநீா் குழாய் ஏற்படுத்தித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினா் கே. காமராஜ், மாவட்டச் செயலாளா் செ. முத்துக்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் பி. முத்துசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் கே .முருகன், ஒன்றிய செயலாளா் எஸ். வெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com