திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட 6,917 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் கோட்டங்களில் கடந்த ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில், வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 30,591 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 6,917 மனுக்களுக்கு தீா்வுகணப்பட்டு ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.