பல்லடம்: பல்லடம் அருகே கே.கிருஷ்ணாபுரத்தில் மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்து தீப்பிடித்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கே.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் கணபதி கவுண்டா் மனைவி சுப்பத்தாள்(85). இவா் தனது மகள் சுசிலா வீட்டில் தனி அறையில் வசித்து வந்தாா். இவா் புதன்கிழமை இரவு மண்ணெண்ணெய் விளக்கைப் பற்றறவைத்துவிட்டு நைலான் கட்டிலில் படுத்துத் தூங்கினராம்.
இந்நிலையில், அந்த விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்துக்கொண்டது. தீ பரவியதில் சுப்பத்தாளின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.