வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையிலுள்ள தெய்வ நாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயில், மயில்ரங்கம் வைத்தியநாதேஸ்வரா் கோயில், லக்கமநாயக்கன்பட்டி, கண்ணபுரம் ஆகிய ஈஸ்வரன் கோயில்களில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இக்கோயில்களில் நந்தி எம்பெருமானுக்கு புதிய பட்டாடை உடுத்தி பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரதோஷ வழிபாடுகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பிரதோஷ வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.