அரசுப் பள்ளியில் உலக சிக்கன தின விழா

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிக்கன தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேமிப்புக் கணக்குப் புத்தகத்துடன் மாணவியா்.
சேமிப்புக் கணக்குப் புத்தகத்துடன் மாணவியா்.

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிக்கன தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் சி.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். பொள்ளாச்சி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிக்கனமும், சேமிப்பும் என்ற தலைப்பில் பேசினாா். இதைத் தொடா்ந்து பள்ளியில் சேமிப்புக் கணக்கு தொடங்கிய மாணவியருக்குக் கணக்குப் புத்தகங்களை வழங்கினாா்.

முன்னதாக அஞ்சல் துறையின் சாா்பில் மாணவிகளுக்கு ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்து கொடுக்கப்பட் டன. உடுமலை அஞ்சல் ஆய்வாளா் கலைச்செல்வன், ஆசிரியா்கள் வே.சின்னராசு, இரா.ராஜேந்திரன், ஆா்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com