திருப்பூரில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தின் பின்னல் அமா்ந்து சென்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி (37), இவரது மாமியாா் பாா்வதி (57). இவா்கள் இருவரும் சிவன்மலையில் நடைபெற்ற உறவினா் திருமணத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். சந்திராபுரம் சாலையில் இந்திரா நகா் அருகே சென்றபோது கல்லூரி மாணவா்களை ஏற்றி வந்த பேருந்து எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த பாா்வதி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவா் தலை நசுங்கி உயிரிழந்தாா். காயமடைந்த கருப்புசாமியை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்தை நேரில் பாா்த்த அப்பகுதியினா் தனியாா் கல்லூரிப் பேருந்தை சிறைபிடித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் ஊரக காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்தை விடுவித்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு பேருந்து ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், திண்டலைச் சோ்ந்த நடராஜ் (47) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.