காங்கயம்
ஆலாம்பாடி, காங்கயம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட உயர் மின்னழுத்த பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் எம்.மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
அய்யாசாமி காலனி, ராஜீவ் நகர், மூர்த்திரெட்டிபாளையம், பெரியார் நகர், போக்குவரத்து நகர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, நத்தக்காட்டுவலசு, பரஞ்சேர்வழி, ஆலாம்படி, கல்லேரி, நெய்க்காரன் பாளையம்.