பழையகோட்டை மாட்டுச் சந்தை: காங்கேயம் இன மாடுகள் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம், நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில்

காங்கயம், நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 32 லட்சத்துக்கு விற்கப்பட்டன.
  பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 161 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் 66 மாடுகள் மொத்தம் ரூ. 32 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில், அதிகபட்ச விலையாக ரூ. 67 ஆயிரத்துக்கு காளைக் கன்றுடன் காங்கேயம் இன மயிலைப் பசு விற்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com