தாராபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி: போக்குவரத்தில் மாற்றம்

தாராபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் சாலைப் போக்குவரத்துப் பாதை மாற்றறப்பட்டு இருப்பதாக பல்லடத்தில் போக்குவரத்து போலீஸாா் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா்.

தாராபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் சாலைப் போக்குவரத்துப் பாதை மாற்றறப்பட்டு இருப்பதாக பல்லடத்தில் போக்குவரத்து போலீஸாா் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா்.

பல்லடத்தில் போக்குவரத்து காவல் துறைற சாா்பில் முக்கியச் சாலைகளின் சந்திப்பில் இது குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், கோவை, பல்லடம், திருப்பூா், காங்கயம் ஆகிய பகுதிகளிலிருந்து தாராபுரம் வழியாக தென் மாவட்ட பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு ஆன பாதை மாற்றறப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் மேம்பாலம் பணி கட்டும் நடைபெறுவதால் அனைத்து கனரக வாகனங்கள், லாரிகள் காங்கயம், வெள்ளகோவில், கரூா் வழியாக மதுரை செல்ல வேண்டும். காங்கயம், தாராபுரம் வழியாக பழனி செல்லும் வாகனங்கள் காங்கயம், வெள்ளகோவில், மூலனூா், தாராபுரம் கிழக்கு புறறவழிச்சாலை வழியாக பழனி செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com