தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன


அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   
 பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட நான்கு சாலை சந்திப்பு, மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீர் கூடங்கள், டாஸ்மாக் பார், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை வைத்திருந்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com