அவிநாசி, ரங்கா நகரில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவிநாசி, ரங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் மகன் கனகராஜ் (38). பனியன் நிறுவன ஊழியர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.