கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் முகக் கவசங்கள் சென்னைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கோவையில் இருந்து சென்னை வழியாக கொல்கத்தாவுக்கு கரோனா சிறப்பு ரயில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் முகக் கவசங்கள் மற்றும் முகக் கவசம் தயாரிக்கத் தேவையான எலாஸ்டிக் பொருள்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.