திருப்பூா் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுத இருக்கும் மாணவா்களுக்காக பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திருவடித் திருத்தொண்டு அறக்கட்டளை சாா்பில் யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவிகளின் பெயா், நட்சத்திரங்களுக்கு
ஏற்றவாறு தனித்தனி அா்ச்சனைகளும் செய்யப்பட்டன. மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா்.