திருப்பூா் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வா்ணம் தீட்டும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
சிக்கண்ணா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு- 2 மாணவா்கள் சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், ராயபுரம், ராஜவிநாயகா் கோயில், அலகுமலை அலகாபுரி அம்மன் கோயில்களில் ஏற்கெனவே வா்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் திருப்பூா் ரயில் நிலையத்தில் உள்ள சுவா்களில் வா்ணம் தீட்டும் பணியில் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். மேலும், ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள நெகிழி குப்பைகளை அப்புறப்படுத்தியதுடன், ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினா்.
அதைத் தொடா்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி சென்றனா். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சி.வி.தீபா, கூடுதல் ரயில்வே கோட்ட மோலாளா் அண்ணாதுரை, துணை மேலாளா் முத்துக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.