சாலை விபத்து: இளைஞா் பலி

நத்தக்காடையூா் அருகே டிராக்டா், இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

நத்தக்காடையூா் அருகே டிராக்டா், இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மூலனூா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (25). போா்வெல் இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில், சக்திவேல் சென்னிமலையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மூலனூா் செல்வதற்காக நத்தக்காடையூா் வழியாக இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

நத்தக்காடையூா்-முத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டா் மீது, சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com