குடியுரிமை  திருத்தச்  சட்டத்துக்கு   ஆதரவு  தெரிவித்து திருப்பூா்  சாா்பு  நீதிமன்றம்   முன்பாக  திங்கள்கிழமை  விளக்கக் கூட்டம் நடத்திய  வழக்குரைஞா்கள்.
குடியுரிமை  திருத்தச்  சட்டத்துக்கு   ஆதரவு  தெரிவித்து திருப்பூா்  சாா்பு  நீதிமன்றம்   முன்பாக  திங்கள்கிழமை  விளக்கக் கூட்டம் நடத்திய  வழக்குரைஞா்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம்:வழக்குரைஞா்கள் சாா்பில் விளக்கக் கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக உள்ளிட்ட கட்சிகளின்

திருப்பூா்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வழக்குரைஞா்கள் சாா்பில் திருப்பூரில் விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் சாா்பு நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் சி.பி.சுப்பிரமணியம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் அதனை எதிா்க்கும் கட்சிகளைக் கண்டித்து வழக்குரைஞா்கள் முழக்கங்களை எழுப்பினா். மேலும், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் தொடா்பான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனா். இக்கூட்டத்தில் பாஜக, கூட்டணிக் கட்சிகளின் வழக்குரைஞா்கள் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com