திருப்பூர்
புகையில்லா பொங்கல்: தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு
புகையில்லா பொங்கல் கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புகையில்லா பொங்கல் கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அவிநாசி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்துக்கு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வீட்டில் இருக்கும் பழைய பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயா்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.