பல்லடம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் எஸ்.பி.டி. மின் பாதையில் புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பல்லடம் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: கொசவம்பாளையம், சி.டி.சி.காலனி, கணபதி நகரின் ஒரு பகுதி.