கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே அசுத்தப்படுத்தும் அவலம்

வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே சுகாதாக் கேட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

News image
Updated On :14 ஜூலை 2020, 8:06 am

DIN

வெள்ளக்கோவில் அருகே தூய்மைப் பணியாளர்களே சுகாதாக் கேட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பச்சாபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் பேப்பர் அட்டைக் கம்பெனி, கான்கிரீட் ரெடிமேட் கட்டடம் உருவாக்கும் நிறுவனம், கருங்கல் கிரஷர்கள், நூல் மில்கள் உள்ளன. கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓலப்பாளையம் கடைவீதிப் பகுதியும் இந்த ஊராட்சியில் உள்ளது. 

இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து பல்வேறு கழிவுகளை ஓலப்பாளையத்தில் கொட்டிச் சென்று விடுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இது போன்றவற்றை எடுத்துச் சென்று முறையாக அப்புறப்படுத்த கஷ்டப்பட்டு, கண்ட கழிவுகளுடன் வீடுகள், வியாபார நிறுவனங்களில் கொட்டப்படும் குப்பைகளையும் சேர்த்து தூய்மைப் பணியாளர்களே தீ வைத்து எரிக்கிறார்கள். 

இதனால் சுகாதாக் கேட்டுடன் நச்சுப் புகை வெளியேறி, காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க ஊராட்சித் தலைவர் வரதராஜன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.