திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கூறியதாவது: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சத்யா நகரைச் சேர்ந்தவர் அப்துல் சமீது(30), இவர் அதே பகுதியில உள்ள பின்னலாடை நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷா பானு (26), இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அப்துல்சமீதுவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அப்துல் சமீது அருகிலிருந்த கத்தியை எடுத்து மனைவி நிஷார்பானுவைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல்சமீதைக் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.