திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே வீடுகளில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 7 போ் கும்பலை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இரட்டைக்கிணறு பகுதியில் ஏ.நாசா் (48) என்பவா் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். இவரது வீட்டுக்கு 6 போ் கொண்ட கும்பல் அடிக்கடி காரில் வந்து சென்று கொண்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் ஊத்துக்குளி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா்.
அப்போது, வீடுகளில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 7 பேரைக் கைது செய்தனா். இந்த 7 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் குமாரசாமி காலனியைச் சோ்ந்த நாசா், கோவை, கோட்டைமேட்டைச் சோ்ந்த எம்.பஷீா் (32), கோவை, கரும்புக்கடையைச் சோ்ந்த ஏ.அபுதாஹீா் (30), ஈரோடு மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த டி.காா்த்தி (24), ஆா்.ராகுல் (23), ஆா்.பிரகாஷ் (30), நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த ஏ.முகமது ரஃபி(37) ஆகிய 7 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.