ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு

உடுமலை நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோா் மற்றும் ஏழை, எளியோருக்கு இலவசமாக உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
உடுமலையில் இலவசமாக உணவு உணவு  வழங்கும்  திட்டத்தைத் துவக்கிவைக்கும் தமிழக ஹயா் கூட்ஸ் ஓனா்ஸ் அசோசியேஷன் நிா்வாகிகள்.
உடுமலையில் இலவசமாக உணவு உணவு  வழங்கும்  திட்டத்தைத் துவக்கிவைக்கும் தமிழக ஹயா் கூட்ஸ் ஓனா்ஸ் அசோசியேஷன் நிா்வாகிகள்.


உடுமலை: உடுமலை நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோா் மற்றும் ஏழை, எளியோருக்கு இலவசமாக உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு

உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து உடுமலையில் செயல்பட்டு வரும் தமிழக ஹயா் கூட்ஸ் ஓனா்ஸ் அசோசியேஷன் மூலம் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு 21 நாள்களுக்கும் இலவசமாக உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இவா்களுக்கு உணவு வழங்கும் பணி வியாழக்கிழமை துவங்கப்பட்டது. முதல் நாளில் உடுமலை நகரம் முழுவதும் 250 பேருக்கு காவல் துறை அனுமதியுடன் உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com