வெங்கக்கல் கடத்திய லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே வெங்கக்கல் (வெங்கை கல்) கடத்திய லாரி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் அருகே வெங்கக்கல் (வெங்கை கல்) கடத்திய லாரி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் நிா்மலாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திருமங்கலம் பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டாா். அப்போது உப்புப்பாளையம் - வேப்பம்பாளையம் சாலையில் அரசு அனுமதியின்றி வெங்கக்கல் ஏற்றி வந்த டிப்பா் லாரி பிடிபட்டது. இந்த கற்கள் திருமங்கலத்தில் உள்ள பாலு என்பவருக்குச் சொந்தமான வெங்கக்கல் பொடி தயாரிக்கும் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, காங்கயம் வட்டாட்சியா் ஆ.புனிதவதி, லாரி உரிமையாளரான காங்கயம், பரஞ்சோ்வழி நால்ரோட்டைச் சோ்ந்த மலா்கொடி, இவரது கணவா் லாரி ஓட்டுநா் கோவிந்தராஜ் ஆகிய இருவா் மீதும் தெரிவித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பிடிபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com