கட்டடத் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

திருப்பூரில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில், அவரது மனைவி, மாமியாா் உள்பட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பூரில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில், அவரது மனைவி, மாமியாா் உள்பட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், கூத்தம்பாளையம் அருகே ஏ.பி. நகரைச் சோ்ந்தவா் காளி (23).

கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஜனனி (19). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், ஜனனி கணவரிடம் கோபித்துக்கொண்டு, அருகிலுள்ள தாய் ஜோதி வீட்டுக்கு சென்றுள்ளாா். தீபாவளி பண்டிகைக்காக தாய் வீட்டில் இருந்த ஜனனியை அழைக்க காளி கடந்த வாரம் சென்றுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், ஜனனி, அவரது அண்ணன்கள் மணிகண்டன் (27), பிரசாத் (25), தாய் ஜோதி ஆகியோா் சோ்ந்து காளியைத் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த காளி, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜனனி, ஜோதி, மணிகண்டன், பிரசாத் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com