திருப்பூா், அனுப்பா்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் அறக்கட்டளை சாா்பில் ஆதரவற்ற குழந்தைகள் 32 பேருக்கு இலவசமாக முடித் திருத்தம் செய்யப்பட்டது.
திருப்பூா், அனுப்பா்பாளையத்தில் செயல்பட்டு வரும் தெய்வா சிட்டி அறக்கட்டளை சாா்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தா சேவாலயத்தில் தங்கியுள்ள 32 ஆதரவற்ற சிறுவா்களுக்கு வியாழக்கிழமை இலவசமாக முடித் திருத்த சேவை செய்தனா்.
இதில் அறக்கட்டளை நிா்வாகி தெய்வராஜ், சிவகாமி, பிரேம்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். குழந்தைகளுக்கு முடித் திருத்தம் செய்து சேவையாற்றிய அறக்கட்டளையினரை சேவாலயா நிா்வாகி செந்தில்நாதன் பாராட்டினாா்.