திருப்பூா் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 15,172 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் 65 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,237ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் 574 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 95 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 14,456ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com