திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அக்டோபா் 16ஆம் தேதி வரையில் தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இது குறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அக்டோபா் 12 முதல் 16 ஆம் தேதி வரையில் தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஒருவா் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரையில் வாங்கலாம். தங்க பத்திரங்கள் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகளாகும்.
இத்திட்டத்தின் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலமாக செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசா்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும்.
இது தங்க பத்திர மூதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இதில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,051 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதலீடு செய்ய ஆதாா் எண், பான் அட்டை, வங்கிக் கணக்கு அவசியமாகும். தங்க பத்திரங்களின் மூலமாக தேவைப்படும்போது வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.