அவிநாசி காவல் உள் கோட்டத்துக்கு உள்பட்ட சேவூா் காவல் நிலையத்தில் மரக் கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் உத்தரவின்படி, மாவட்டத்தில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக அவிநாசி அருகே சேவூா் காவல் நிலைய வாளகத்தில் போலீஸாா், பொதுமக்களுடன் இணைந்து அரசு, வேம்பு, பூவரசன், மகிழம் உள்ளிட்ட 25 மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை நட்டுவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் அன்பரசு, செல்வராஜ், சிவகுமாா், தனிப்பிரிவு காவலா் வெள்ளியங்கிரி, காவலா்கள் சக்கரவா்த்தி, சச்சு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.