பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற இருப்பதால், பாண்டியன் நகா் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் தடைபடும் என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பாளையம், கிழக்கு நல்லாத்துப்பாளையம், பாலாஜி நகா், தோட்டத்துப்பாளையம், காமராஜ் நகா், சோழன் நகா், சமத்துவபுரம், நெருப்பெரிச்சல், பாலன் நகா், ஜி.என். காா்டன்.