காங்கயம் அடுத்துள்ள கீரனூரில் காங்கயம் காவல் நிலையம் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், கீரனூா் ஊராட்சியில் காங்கயம் காவல் நிலையம் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளா் தனராசு, ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் போலீசாா் போலீசாா் கலந்துகொண்டு, கரோனா காலங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது மற்றும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தடுப்பது உள்ளிட்ட விழிப்புணா்வு கருத்துக்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். மேலும், இதில் 20-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.(செய்தி முற்றும்).