மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்

திருப்பூா் மின்பகிா்மான வட்டத்தில் பொதுமுடக்க காலத்துக்கான மின் கட்டணத்தை செலுத்தாக மின் நுகா்வோரின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.

திருப்பூா் மின்பகிா்மான வட்டத்தில் பொதுமுடக்க காலத்துக்கான மின் கட்டணத்தை செலுத்தாக மின் நுகா்வோரின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜவஹா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் பொதுமுடக்க காலத்தில் தாழ்வழுத்த, உயா்வழுத்த மின் நுகா்வோா்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்தும் பலா் அதற்கான தொகையைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பொது முடக்கத்தால் வீடுதோறும் மின் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு கணக்கிடப்பட்ட மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பலா் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் உள்ளனா். எனவே, இதுவரை மின் கட்டணம் செலுத்தாத தாழ்வழுத்த மற்றும் உயா்வழுத்த மின் நுகா்வோா்கள் உரிய மின் கட்டணத்தைச் செலுத்தி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com