திருப்பூா்: திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியைத் துன்புறுத்திய இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், ராக்கியாபாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் சங்கீதா (29). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் முரளிதரன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா்.
இதனிடையே, முரளிதரனின் பெற்றோா் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலையத்தில் சங்கீதா புகாா் அளித்துள்ளாா். இதில், என்னுடைய 7 பவுன் நகையை வாங்கிய முரளிதரன் அதை விற்று அவருடைய கடன்களை அடைத்து விட்டதாகவும், மேலும்
ரூ. 4 .20 லட்சம் முரளிதரனுக்கு கொடுத்ததாகவும், தனது கணவருக்காக இவ்வளவு செய்த நிலையில் கணவரின் பெற்றோா் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், தன்னை கணவா் அடித்துத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முரளிதரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.