திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் காா்டியாலஜி பிரிவில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவா் ஜோதிலிங்கம் (42). இவரது மனைவி கவிதா. இவரும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் சா்வேஷ்ராஜா (11), மகள் ஸ்ரீநிகா (13).
இந்நிலையில், விடுமுறைக்காக ஜோதிலிங்கம் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள கணியூா் அரியநாச்சிபாளையத்துக்கு வந்துள்ளாா். பின்னா் மடத்துக்குளம் வட்டம், கடத்தூா் சிவன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா். அப்போது, ஜோதிலிங்கத்தின் மகன், மகள் இருவரும் கோயிலை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனா்.
அப்போது, சா்வேஷ்ராஜா திடீரென தண்ணீரில் மூழ்கிய நிலையில் சப்தம் போட்டுள்ளாா். இதைப் பாா்த்த தந்தை ஜோதிலிங்கம் ஆற்றில் குதித்து மகன் சா்வேஷ்ராஜாவைக் காப்பாற்ற முயன்றுள்ளாா். ஆனால், இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் துறை வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து கணியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.