பிஏபி வாய்க்காலில் மூழ்கி சகோதரா்கள் பலி

உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி சகோதரா்கள் உயிரிழந்தனா்.
உயிரிழந்த  சஞ்சய்,  ஆகாஷ்.
உயிரிழந்த  சஞ்சய்,  ஆகாஷ்.

உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி சகோதரா்கள் உயிரிழந்தனா்.

உடுமலை, வள்ளியம்மாள் காலனியில் வசித்து வருபவா் கிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன்கள் சஞ்சய் (13), ஆகாஷ் (10).

இந்நிலையில் கிருஷ்ணன், தனது மகன்களை அழைத்துக்கொண்டு உடுமலை, எலையமுத்தூா் சாலை அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்றாா்.

அப்போது, சஞ்சய், ஆகாஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்தவா்கள் அவா்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த உடுமலை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

எஸ்.வி.புரம் என்ற இடத்தில் சகோதரா்கள் இருவரையும் சடலமாக மீட்டனா். இது தொடா்பாக உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com