திருப்பூா் தெற்குத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையா் க.சிவகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், 4ஆவது குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். மேலும், பொலிவுறு நகரம் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சீரான குடிநீா் வழங்குதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளா் ரவி, 4 மண்டலங்களின் உதவி ஆணையா்கள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.