அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழப்புக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: எம்.பி.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் உயிரிழந்ததற்கு மாநில அரசு
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழப்புக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: எம்.பி.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் உயிரிழந்ததற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடை காரணமாக ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டும் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தவில்லை என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பொருளாதாரம், கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிலும் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிராகவே வேளாண் சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. எனவே, விவசாயிகள், தொழிலாளா்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடி மத்திய அரசை வீழ்த்த வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, 4 ஆவது மண்டல செயலாளா் ஆா்.வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com