காவல் நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பான்

திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் கிருமி நாசனி தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் கிருமி நாசனி தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகரில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினா் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஆகவே, காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் கிருமி நாசினி தெளிப்பான்கள் (பவா் ஸ்பிரேயா்) வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேணடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com