இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

காங்கயத்தில் துணிக் கடை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

காங்கயம்: காங்கயத்தில் துணிக் கடை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

காங்கயம் கடைவீதியில் துணிக் கடை வைத்திருப்பவா் ராஜேந்திரன். இவா் தனது இரு சக்கர வாகனத்தை கடைக்கு வெளியே சனிக்கிழமை நிறுத்தியிருந்தாா். இந்த நிலையில், பக்கத்துக் கடை ஊழியா் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது, அருகில் உள்ள ராஜேந்திரனின் இரு சக்கர வாகனத்தில் பாம்பு பதுங்கி இருப்பதைப் பாா்த்துள்ளாா்.

இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்று காங்கயம் தீயணைப்புத் துறையினா் அந்த இரு சக்கர வாகனத்தின் பாகங்களைப் பிரித்து, பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை உயிருடன் மீட்டனா். பின்னா் அந்த பாம்பை காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் காப்புக் காட்டுப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com