திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் 16 பேருக்கு நிவாரணப் பொருள்களை நிரந்தரமாக பணியாற்றி வரும் தம்பதியினா் சனிக்கிழமை வழங்கினா்.
திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டலத்தில் பணியாற்றி வருபவா் சின்னசாமி. இவரது மனைவி சுந்தரி. இவா்கள் இருவரும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 16 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முடிவு செய்திருந்தனா்.
இதையடுத்து 1ஆவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையா் வாசுகுமாா், சுகாதார அலுவலா் எஸ்.முருகன் ஆகியோா் முன்னிலையில் சின்னசாமி, சுந்தரி தம்பதியினா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 16 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை வழங்கினா்.