இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம்

அம்பேத்கா் நினைவு தினத்தை ஒட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஊத்துக்குளி சமுதாய கூடத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பேத்கா் நினைவு தினத்தை ஒட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஊத்துக்குளி சமுதாய கூடத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை காங்கயம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் இரா.தனராசு தொடங்கிவைத்தாா். இதில் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் மருத்துவா் ஜெ.வசந்தகுமாா் தலைமையிலான குழுவினா் பங்கேற்று, 20 யூனிட் ரத்தம் சேகரித்தனா்.

இந்த முகாமில், அகில இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் வட்டச் செயலாளா் க.லெனின், வட்டக் குழு உறுப்பினா் பாலமுரளி, ஊத்துக்குளி காவல் ஆய்வாளா் டி.ஏ.தவமணி, ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com